இந்தியாவின் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
இவருக்கு இலங்கை மதிப்பில் 29.73 கோடி ரூபா பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது . உலக அழகி பட்டத்தை வென்ற ஓபல் சுச்சாட்டாவுக்கு கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூட்டி பாராட்டினார்.
இவரது ஆடை அனைவரையும் ஈர்க்கும் வகையில் "பெண்களுக்கான நம்பிக்கை, தூய்மை மற்றும் விசுவாசம்
" என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
ஓபல் சுச்சாட்டா 2003ஆம் ஆண்டு பிறந்தவர்.
தாய்லாந்து, சீன மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் உரையாட திறமை அவரிடம் உள்ளது. 16 வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சையை எடுத்து கொண்டவர்.
இதன்பின் மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் செய்து வந்துள்ளார். உலக அழகி பட்டத்தை வெல்வதற்கான பயணத்தை 2021ஆம் ஆண்டிலேயே தொடங்கி தற்போது வெற்றியும் அடைந்துள்ளார்.
இதேநேரம் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தற்போதைய மிஸ் வேர்ல்ட் இலங்கை அழகி அனுதி குணசேகர இந்த போட்டியில் பங்கேற்று இருந்தார்..
அனுதி குணசேகர விளையாட்டு சவால், திறமை சவால், நேரடி சவால், சிறந்த மோடல் போட்டி, மல்டிமீடியா சவால் மற்றும் அழகு நோக்கத்துடன் கூடிய பிரிவு உள்ளிட்ட பல விரைவான நிகழ்வுகளில் பங்கேற்றார்.
எனினும் 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதி சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பை இலங்கை அழகி அனுதி இழந்துள்ளார்.
ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அனுதி குணசேகரா தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லூடகம் மற்றும் நேரடிப் போட்டிகளில் வலுவான புள்ளிகளை பெற்ற போதிலும், அவர் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
தாய்லாந்து, சீன மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் உரையாட திறமை அவரிடம் உள்ளது. 16 வயதிலேயே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சையை எடுத்து கொண்டவர்.
இதன்பின் மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் செய்து வந்துள்ளார். உலக அழகி பட்டத்தை வெல்வதற்கான பயணத்தை 2021ஆம் ஆண்டிலேயே தொடங்கி தற்போது வெற்றியும் அடைந்துள்ளார்.
இதேநேரம் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தற்போதைய மிஸ் வேர்ல்ட் இலங்கை அழகி அனுதி குணசேகர இந்த போட்டியில் பங்கேற்று இருந்தார்..
அனுதி குணசேகர விளையாட்டு சவால், திறமை சவால், நேரடி சவால், சிறந்த மோடல் போட்டி, மல்டிமீடியா சவால் மற்றும் அழகு நோக்கத்துடன் கூடிய பிரிவு உள்ளிட்ட பல விரைவான நிகழ்வுகளில் பங்கேற்றார்.
எனினும் 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதி சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பை இலங்கை அழகி அனுதி இழந்துள்ளார்.
ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அனுதி குணசேகரா தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லூடகம் மற்றும் நேரடிப் போட்டிகளில் வலுவான புள்ளிகளை பெற்ற போதிலும், அவர் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது