முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தான் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் 7 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக சொத்து சேர்த்தமை தொடர்பான வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம்திகதி விசாரi ணக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமல் வீரவன்ச அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் சம்பளம் மற்றும் ஏனைய வருமானங்களிலிருந்து சம்பாதிக்க முடியாத சுமார் 7 கோடியே 50 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றநீதிபதி நவரட்ண மாரசிங்க உத்தரவிட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதி, கடந்த வியாழக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதேவேளை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கங்களில் பணியாற்றிய 40 அரசியல்வாதிகள் கைது செய்யப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர்விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட இதேபோன்ற வழக்குகளை விசாரிக்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
1015 ஆண்டுகள் பழமையான இந்த வழக்குகள், கடந்தகாலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் மூடி மறைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி உருவாக்கிய தற்போதைய அரசாங்கம், இந்த வழக்குகளைத் திறந்து, விசாரணைகள் மற்றும் ஆரம்பவழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது என்றார்.
சி. ஐ.டி முன் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி இப்போது என்னால் பேச முடியும். கடந்த காலத்தில் அமைச்சர் பதவிகளை வகித்த முன்னாள் எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர்களின் பெயர்களை நான் வெளிப்ப டையாக வெளியிட முடியாது, என்று அவர்கூறினார்.
சில வழக்குகளை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் கையாளுகிறது என்று அவர் கூறினார். முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புக் குழுவில் பணியாற்றிய அமைச்சர், சிஐடியால் விசாரிக்கப்படும் சில வழக்குகள் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் என்றார்.
நாங்கள் எப்.சி.ஐ.டி.யை மீண்டும் உயிர்ப்பித்துள்ளோம். நிதிக் குற்றங்களை விசாரிக்க போதுமான தகுதியுள்ள அதிகாரிகள் அதில்இல்லை. அதற்கு வளங்களை வழங்குவதோடு கூடுதலாக அதை நிவர்த்தி செய்யவும்நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, அரசு வளங்களை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், பொதுப் பணத்தை மோசடி செய்ததற்காகவும் தவறு செய்தவர்களைத் தண்டிப்பது என்பது தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரசார முழக்கமாக இருந்தது.
ஜனாதிபதிஅனுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத் தலைவர்கள், தவறு செய்தவர்களுக்குஎதிராக விரைவில் சட்டம் அமுல்படுத்தப் படும் என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு அரசியல்வாதிகள்மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்பெர்னாண்டோ ஆவர். தவிர, முன்னாள்அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல, பிரசன்ன ரணவீர மற்றும் மேர்வின் சில்வா ஆகியோர் இப்போது தங்கள் கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளில் சிறையில் உள்ளனர்.
இதற்கிடையில், அரசாங்கம் அரசியல் காரணங்களுக்காக தங்களது உறுப்பினர்களை வேட்டையாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன
இதேநேரம் நீதிமன்றத்தினால் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் நளின் பெர்ணான்டோவிற்கும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுப் பிரிவில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிகாரிகள், ஆயுள்தண்டனை அனுபவிக்கும் கைதிகளும் கொலை மற்றும் பாலியல்வன்முறை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் பிரிவிலிருந்து இருவரையும் பிரித்து ஒன்றாக வைத்துள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருவரினதும் பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் அரசியல் எதிரிகள் இருக்ககூடும் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர் என வெலிக்கடை சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.