காணாமல் போனோர் எங்கே ; உடனடித் தீர்வு அவசியம் - சர்வதேச செஞ்சிலுவை சங்கம்


காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் துன்பத்துக்குத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.