உக்ரேன் பிரதமர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கான கடிதம் ஒன்றை அரசுக்கு அவர் நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையே 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரானது மூன்று ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது.
உக்ரேனுக்கு அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷ்யாவுக்கு, வடகொரியா இராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகின்றது.
போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபடவுள்ளது.
இருப்பினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ள நிலையில், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் அரசில் நேற்றைய தினம் பாரிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, புதிய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், உக்ரேன் பிரதமராக டெனிஸ் ஷிம்ஹால் பதவி வகித்து வந்த நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.
இதையடுத்து, பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்வைரைடென்கோவை, டெனிஸ் ஷிம்ஹாலுக்கு பதிலாக புதிய பிரதமராக ஜெலன்ஸ்கி அறிவித்து உத்தரவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது