பாதாள குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவின் உதவியாளர்கள் இருவர் அதிரடியாக கைது



பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்காக மோசடியான முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவுத் துறைத் தலைமையகத்திடம் தவறான தகவல்களைச் சமர்ப்பித்து 03 கடவுச்சீட்டுகளைப் பெற்றதாக கருதப்பட நிலையில் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 51 வயதுடைய மாளிகாவத்தை மற்றும் அஹெலியகொட பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

 
குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டுக்கு அமைய கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக, இரண்டு சந்தேக நபர்களுத் நேற்று முன்தினம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மேலும் அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர்,  குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலக குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே எனப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத்  புகைப்படத்தைப் பெற்று, அதைத் திருத்தி, பாஸ்போர்ட் செயலாக்கத்திற்காக குடிவரவுத் துறைக்கு போலியாக அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

ஆம் 2014 ஆம் ஆண்டு பெறப்பட்ட இந்த போலிகடவுச் சீட்டு பயன்படுத்தி  கெஹெல்பத்தர பத்மே கடந்த  2021 ஆம் ஆண்டு வெளிநாடு சென்றுள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு கடவுச்சீட்டு காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க , அவர் வெளிநாடு சென்றிருந்தபோது, தனது புகைப்படம் மற்றும் தகவல்களை குடிவரவுத் துறையிடம் மோசடியாக சமர்ப்பித்து, 2024 ஆம் ஆண்டு ஒரு நாள் சேவை மூலம் மோசடியாக புதிய கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.

மேலும் 2025 ஆம் ஆண்டு தனது புகைப்படத்தை வேறு இரண்டு பெயர்களில் பதிவுசெய்து மோசடியாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய விசாரணைகளில் மேலும் இரண்டு கடவுச்சீட்டுக்கள் இவ்வாறு மோசடியாக பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டு சந்தேக நபர்களும் நேற்று முன்தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மனித கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.