மொரட்டுவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவ, ராவதவத்தையை சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் முன்னெடுத்த விசாரணையில், இந்த போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம், சந்தேக நபரின் வீட்டிலிருந்து 25 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள், 8 போலி 1,000 நாணயத்தாள்கள், 1 போலி 100 ரூபாய் நாணயத்தாள் மற்றும் 2 போலி 20 ரூபாய் நாணயத்தாள்களும் மீட்கப்பட்டன.
மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.