பசில் ராஜபக்சவின் பயணத்தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம்..! வெளிநாடு செல்ல அனுமதி

 

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை இலங்கை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவிற்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பசில் ராஜபக்ச மற்றும் 05 பேருக்கு ஜூலை மாதம் பயணத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.