சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியில் இராணுவ இலக்கொன்றை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிரியாவின் ட்ரூஸ் சமூக உறுப்பினர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் கூறுகின்ற போதிலும், தாக்குதல்களுக்கு அரசியல் மற்றும் இராணுவ நோக்கமும் உள்ளது என கூறப்படுகின்றது.
சுவைடா பகுதிக்கு செல்லும் வழியில் இருந்த கனரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட பல கவச வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்கியுள்ளது.
அத்துடன், தெற்கு சிரியாவில் துப்பாக்கிச் சூடு சாவடிகள், ஆயுத சேமிப்பு வசதிகள் மற்றும் கூடுதல் சிரிய ஆட்சி இராணுவ இலக்குகளும் தாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமது படைகள் 'ட்ரூஸ் இன சகோதரர்களைக் காப்பாற்றவே', இந்த தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தாக்குதல்களைத் துரோக ஆக்கிரமிப்பு என்று சிரிய வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை சிரியா மீது இஸ்ரேலியப் படையினர் நடத்தும் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ இதனை அறிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ இதனை அறிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போதைய நெருக்கடியான நிலையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு அமெரிக்காவும் அரேபிய நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சியை வரவேற்பதாக சிரிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் சிரியாவில் ட்ரூஸ் போராளிகளுக்கும் பெடோயின் பழங்குடியினருக்கும் இடையிலான மோதல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தது முதல் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்