இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்தான நிலைமை : அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?



நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாத இறுதிக்குள், மருத்துவ வழங்கல் துறையிடம் கிட்டத்தட்ட 180 வகையான மருந்துகள் கையிருப்பில் இல்லை.

மேலும், வைத்தியசாலை அமைப்பில் கிட்டத்தட்ட 50 மருந்துகள் கையிருப்பில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இப்போது நிலைமை இன்னும் மோசமாகிவருகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் போன்றவற்றிலும் கூட ஒரு பிரச்சனை இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்களிலும், வைத்தியசாலை அமைப்பிலும் ஒட்டுமொத்தமாகவும் பிராந்திய ரீதியாகவும் சிக்கல்களைக் காண்கிறோம்.

வைத்தியசாலை அமைப்பிலேயே சில மருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

அதன்படி, நாளை காலை 8 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இந்த வேலைநிறுத்தத்திற்கு சுகாதார அமைச்சர், பொது சேவை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலை எதிர்பார்த்திருந்த போதிலும், சுகாதார அமைச்சு அதை வழங்கவில்லை என்றும் இந்த விடயத்தில் அவர்கள் தலையிடாததால்வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டியிருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்