அதிகாலை அலரி மாளிகையில் ஏற்பட்ட மோதல்! பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள்: 10 பேர் காயம்


அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குறித்த மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதல் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலேயே ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என காவல் துறையினர் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.