கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191 ஆவது வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்துக்கு முன்னதாக தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சி க்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள்
நடைபெறும்.
இதையடுத்து எதிர்வரும் 12ஆம்திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர்மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் வெஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படும்.
திருவிழா தினமான 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும், 5 மணிக்கு சிங்கள மொழியிலும், 6 மணிக்குதமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் அன்றைய தினம் மாலை5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் ஆசீர்வாதத்துடன் நிறைவு பெறும்.