யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைக்குழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பபட்டது.
குறித்த போராட்டமானது, கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனித புதைக்குழி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்போது கலக்கமடக்கும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.