ரணிலின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக அணி திரளுங்கள்! அநுர அழைப்பு

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

காலி முகத்திடல் போராட்டக்களத்தின் கிளை: பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை 

ரணிலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்

ரணில் -  மொட்டு அரசாங்கத்தினர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸாரும்  காலி முகத்திடல் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து நள்ளிரவில் போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டு நிலையில்,  அதற்கு எதிராக தற்போது பெருமளவிலான போராட்டக்காரர்கள் இணைந்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.