தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் – தமிழகத்தைச் சேர்ந்த குழு இலங்கைக்கு வருகை

இலங்கையினால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை – இந்திய அரசாங்கங்ளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு காணப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள பயன்படுத்த முடியாத மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீண்டும் அதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.