றாகமை படுவத்தை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரிவு குற்ற விசாரணை பணியகத்தால் றாகமை படுவத்தை பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 9 கிலோ 220 கிராம் ஹெரோயின், 67 கிலோ 520 கிராம் கேரள கஞ்சா, 02 சப்மெஷின் ரக துப்பாக்கிகள், 9மில்லி மீற்றர் அளவான 10 தோட்டாக்கள், ஒரு வாள், விமானப்படை சீருடைகள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் 4 தராசுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.