எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர்.
ரயில் ஓட்டுநர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான பல பிரச்சினைகள் காரணமாக இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ரயில் ஓட்டுநர்கள் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்றவற்றை சமாளிப்பதற்கு சம்பள உயர்வை கோருகின்றனர்.
இந்நிலையில், பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம், ரயில் நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை உடன்பாடொன்று எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.