கொழும்பு நகரைச் சுற்றியும் பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பறக்கும் பல உலங்குவானூர்திகள்!

பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பல உலங்குவானூர்திகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரையும் இராஜினாமா செய்யுமாறு கேட்டு போராடிவரும் நிலையில் விமானப்படை உலங்குவானூர்திகள் தொடர்ந்தும் வட்டமிட்டு வருகின்றன.கொழும்பில் போராட்டம் தொடங்கிய பின்னர் முதல் தடவையாக இலங்கை இராணுவ உலங்குவானூர்திகள் போராட்ட இடங்களுக்கு மேலே பறக்கின்றமை குறிப்பிடத்தக்கது