காலி - நெலுவ, கிண்ணியா உள்ளுராட்சிமன்றங்களை தனதாக்கிய சஜித் அணி : கொட்டகலை பிரதேச சபை இதொகா வசம்


 

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர  சபையின் அதிகாரத்தையும் தலைவர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி  தன்வசப்படுத்தியுள்ளது.

 தலைவரை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான எம்.எம்.மஹ்தி வெற்றி பெற்றுள்ளார்.

இதேவேளை காலி மாவட்டம் நெலுவ பிரதேச சபையின் அதிகாரத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான அஜித் சந்தன வாக்கெடுப்பின் ஊடாக காலி - நெலுவ பிரதேசசபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கொட்டகலை பிரதேச சபையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

இதற்கமைய கொட்டகலை பிரதே சபையின் தவிசாளராக இதொகா உறுப்பினர் ராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சபையின் உப தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசப் யாகுள மேரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.