இன்று முதல் மீண்டும் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை!

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளது.இதேவேளை ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு மேலதிகமாக ரஷ்யாவின் அசூர் எயார் விமான சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு குறித்த விமானம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த சேவை ஆரம்பிக்கவுள்ளது.மேலும் குறித்த விமானம் வாராந்தம் நான்கு தடவைகள் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.