நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு : 400க்கும் மேற்பட்டோர் பலி



ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் கிட்டத்தட்ட 427 பேர் பலியாகியுள்ளனர்.

மியன்மாரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
பங்களாதேஷில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரோகிங்கியா அகதிகள் உள்ளனர்.

இதுதவிர, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளவும் அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.


துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆபத்தான முயற்சிகள் பெரும்பாலும் துயரத்தில் முடிவடைகின்றன.

இந்நிலையில் கடந்த மே 9-ஆம் திகதி, பங்களாதேஷின் காாக்ஸ் பஜார் அகதிகள் முகாமில் இருந்து இந்தோனேசியா நோக்கிச் சென்ற 267 ரோகிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மியன்மார் கடல் பகுதியில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 201 பேர் உயிரிழந்தனர், 66 பேர் மாத்திரமே உயிர் பிழைத்தனர்.

மறுநாள், மே 10-ஆம் திகதி, 247 ரோகிங்கியா அகதிகளுடன் சென்ற மற்றொரு படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த இரண்டாவது துயர சம்பவத்தில் 226 பேர் உயிரிழந்தனர், 21 பேர் மாத்திரமே உயிர் தப்பினர்.


இந்த இரண்டு நாட்களில் நடந்த படகு விபத்துக்களில் மொத்தம் 427 ரோகிங்கியாக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.