ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம்-முன்னாள் அமைச்சரின் மகன் தப்பி ஓட்டம்!

ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகனே இவ்வாறு தேடப்பட்டுவந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என சி.ஐ.டி தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் டுபாய் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.