ரஷ்யா மற்றும் அமெரிக்கா உறவு மோசமாகிவிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட தூரம் தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கினால் இவ்வாறான சூழல் உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா உள்பட 140 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நிபுணார்கள் பங்கேற்ற கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்த அவர்,
“உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் அனைத்தும் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளன.
அவார்கள் அனைவரும் எதிர்த்து ரஷ்யா போரிட்டு வருகின்றது.
மெதுவாக முன்னேறுகின்றது, முன்னேறிய இடங்களில் வலுவாக நிலைகொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்தியாவில் இருந்து அதிக அளவில் விவசாய உற்பத்திப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இரு நாடுகள் இடையிலான வா்த்தக சமநிலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீா்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கையை புடின் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலடி தரும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகின்றது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட புடின்,
“ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை தண்டிக்கும் வகையில் அமெரிக்கா வரிகளை விதித்தது.
இதனால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகளை குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதன் மூலம் நிவா்த்தி செய்து வருகின்றோம்.
அத்தோடு, இறையாண்மையுள்ள ஒரு நாட்டை கௌரவித்து வருகின்றோம்.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள வா்த்தக சமநிலையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யும் வகையில் இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் வேளாண்மை பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.
இது தொடா்பாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன், நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுடன் வா்த்தகம் உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.
ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக இருந்த காலம் முதல் தற்போது வரையில் இந்தியாவுடன் நட்புறவு தொடா்கின்றது.
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிவுடனான எனது சந்திப்புகளும் மற்றும் உரையாடல்களும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை” என அவர் தெரிவித்துள்ளார்.