லிபியாவின் நாடாளுமன்றத்தின் ஒருபகுதிக்கு போராட்டக்காரர்களால் தீவைப்பு!

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில் டயர்களை எரித்ததால், இணையத்தில் வெளியிடப்பட்ட படங்கள் அடர்த்தியான புகை மண்டலங்களைக் காட்டின.

தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் முட்டுக்கட்டைக்கு எதிராக மற்ற லிபிய நகரங்களில் பேரணிகள் நடந்துள்ளன.தலைநகர் டிரிபோலியில், போட்டி நிர்வாகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு இடைக்கால ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவரான அப்துல் ஹமீட் டிபீபா ஆதரவு அளித்தார், அவர் நாட்டின் அனைத்து நிறுவனங்களும் மாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.வாக்கெடுப்புக்கு வழி வகுக்கும் நோக்கில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் தரகு பேச்சுவார்த்தைகள் சிறிய முன்னேற்றத்துடன் முடிவடைந்த ஒரு நாளுக்குப் பின்னரே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவு கிளர்ச்சியால் லிபியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த கர்னல் முயம்மர் கடாபியை பதவி நீக்கம் செய்ததில் இருந்து அங்கு குழப்பம் நிலவி வருகிறது.

எண்ணெய் வளம் மிக்க நாடான லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்குப் ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களை கொண்ட நாடா லிபியா விளங்கியது.