சிக்கியுள்ள பாதாள குழு தலைவர்களின் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்து .. அரசியல்வாதிகளின் பெயர்களிலும் உள்ளது என தகவல்



2025 ஆம் ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில், 500 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான சொத்துக்கள்த ற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சொத்துக்களே அதிகளவில் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குகிறது.

அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது சொத்துக்களை பொறுப்பேற்று பராமரிப்பதற்காக விசேட அதிகார சபையொன்றை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்தெரிவித்துள்ளார்.