நித்தியானந்தா இலங்கையில் அடைக்கல கோரிக்கை! ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம்


இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா அந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் உதவிசெய்யும் பட்சத்தில் எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக்கணக்கான டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம் என்றும் நிந்தியானந்தா கடிதத்தில் கூறியுள்ளார்.

சிறி நித்தியானந்தா பரமசிவம் சுவாமிகளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியம்.

நித்தியானந்தா உடலுக்கு என்ன நேர்ந்தது என்பதை கைலாசாவில் உள்ள மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தனி ஆட்சி பெற்ற கைலாசாவில் போதுமான மருத்துவ வசதிகளும் இல்லை. ஆதலால், உடனடியாக நித்யானந்தாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது.

ஆதலால் நித்தியானந்தாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அரசியல் புகலிடம் தர வேண்டும்.

விமான ஆம்புலன்ஸ் மூலம் நித்தியானந்தாவை இலங்கைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவ வேண்டும். சில சக்திகளால் நித்தியானந்தாவின் உயருக்கு ஆபத்து இருக்கிறது.

ஆதலால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்து, கைலாசாவில் இருந்து பாதுகாப்புடன் செல்வதே சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

நித்தியானந்தாவின் மருத்துவ சிகிச்சைக்கு தேவைாயன அனைத்து செலவையும் கைலாசா அரசு ஏற்றுக்கொள்ளும்.

நித்தியானந்தாவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையுடன் ராஜாங்க ரீதியான உறவை ஏற்படுத்த கைலாசா விரும்புகிறது.

நித்தியானந்தாவுக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருத்துவ சாதனங்களை கைலாசா அரசு கொள்முதல் செய்யும்.

எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக்கணக்கான டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம். 

நித்தியானந்தாவுக்கு அரசியல் புகலிடம் வழங்கிவிட்டால், இலங்கையில் தேவையான முதலீட்டையும் நித்தியானந்தா வழங்குவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது