மூதூரில் யுவதி படுகொலை : காதலனின் அப்பா, சித்தப்பா உள்ளிட்ட 6 பேர் அதிரடியாக கைது


 
மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து 25 வயது யுவதி ஒருவரின் சடலம் நேற்று (05) மாலை மீட்கப்பட்ட பின்னணியில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த யுவதியை, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் காதலனின் தந்தை, சித்தப்பா மற்றும் பாழடைந்த கிணற்றில் சடலத்தை போட்டு அதற்கு மேலால் குப்பைகளை போட்டு மூடியதாக சந்தேகிக்கப்படும் பெக்கோ இயந்திரச் சாரதி, பெக்கோ வாகன தரகர், கொலை செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சந்தேக நபர் என ஆறு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சேருநுவர-தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி  என தெரியவருகின்றது.
உயிரிழந்த யுவதி , காதலனினால் கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் 25 வயதான காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-----