ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஆர்ப்பாட்டம் ஆரம்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்தே போராட்டம் இடம்பெறுகின்றது.இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், “முழு நாடும் அழிவில், பொறுத்தது போதும், ஒன்றாய் அணித்திரளுங்கள்” என்ற தொனிப்பொருளின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.