'போரை நடத்த மஹிந்தவுக்கு இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்து உதவி செய்த ஜே.வி.பி..." : வெளியான முக்கிய தகவல்


யுத்தத்தை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியவர்கள் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்கள், கிராமங்களாக சென்று யுத்தத்திற்காக இளைஞர்களை சேர்த்துக்கொண்டதும் அவர்களே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

செம்மணி என்பது அவலக் குரலின் அடையாளமாகும். அரச பயங்கரவாதத்தினாலேயே செம்மணி போன்ற ஒரு துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்னும் தமிழர்களின் போராட்டம் நீடித்துக்கொண்டே இருக்கின்றன.

 அதிகாரபகிர்வுக்காகவே உள்நாட்டில் யுத்தம் இடம்பெற்றது. இந்த விடயத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அனுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் .

இதேநேரம் ஈழத்தமிழரை கைவிட்டது போல் மலையகத் தமிழர்களையும் கைவிட வேண்டாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது அவரிடம் தாம் கூறியதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.