கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லைஎன வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்த அர்ச்சுனா இராமநாதன்,இன்று 15 கோடி ரூபா சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி.யான இளங்குமரன்தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்த அவர்,
அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில்மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர்.
ஊழலை ஒழிக்கப் போகிறேன் என சாவகச்சேரியில் இருந்து வந்தவர் இன்று கொழும்பில் நாமலின் வீட்டை சுற்றித் திரிகிறார் .ஒருவேளை ஐஸ்லாந்தில் சுகாதார அமைச்சராக வரலாம் என கனவு காண்கிறாரோ தெரியவில்லை., சுகாதார அமைச்சராக வந்தால் ஊழல் செய்யலாம் கஞ்சா கடத்தலாம் எனநினைக்கிறாரோ தெரியவில்லை.
பாராளுமன்ற தேர்தல் காலத்தில் தனதுகாருக்கு தவணைப் பணம் கட்ட காசு இல்லை என புலம்பெயர் மக்களிடம் காசுசேர்த்தார். அவரிடம் காசு கொடுத்து ஏமாந்த புலம்பெயர் தேசத்தவர்கள் இருந்தால் ,இலங்கை நீதித்துறையை நாடினால் அவர்கள் நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன்அவருக்கு சிறைத் தண்டனையையும் பெற்றுக் கொடுக்க முடியும். புலம்பெயர் தேசத்தவர்களை ஏமாற்றி 15கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளார்.
அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைக்காட்டிக் கொடுத்த பரம்பரையை சேர்ந்தவர்.
அவரது உடலில் ஓடுவது காட்டிக்கொடுக்கும்பரம்பரையை சேர்ந்தவர்களின் இரத்தம்.துறைமுகத்தில் விடுவிக்கப்பட்ட 350கொள்கலன்கள் விடுதலைப்புலிகளுடையது எனக் கூறினார் அவர் என்ன நோக்கத்திற்காகஅது தொடர்பில் பேசினார் என எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.