அமைதிப்பேச்சு நடைபெற்று வரும் நிலையில் காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் : கோபமடைந்த ட்ரம்ப்


அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து இஸ்ரேல், ஹமாஸ், எகிப்து, கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் டொனால்ட் ட்ரம்பி்ன் ஆலோசகரான அவரது மருமகன் ஜேரட் குஷ்னர்  கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இப்போர் தொடங்கி இன்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரிந்துரைத்தார்.

காசாவை பயங்கரவாதமற்ற, அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதி பூங்காவாக மற்றும் செயல் திட்டத்தை இந்த அமைதி திட்டம் கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இணக்கம் தெரிவித்த நிலையில், ஹமாஸ{க்கு 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது.

72 மணிநேர கெடு முடிந்ததை அடுத்து, ஹமாஸும் அமைதி திட்டத்தை ஒப்புக் கொண்டது.

இந்த சூழலில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இருதரப்பு பிரதிநிதிகளோடு எகிப்திய, கட்டார் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளனர். இவர்களோடு ட்ரம்பின் மருமகனும், தனி ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென இஸ்ரேலுக்கு ட்ரம்ப் வலியுறுத்தினார்.

ஆனால், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 21 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகதாகவும் காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியல் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அரபு நாடுகள் கோபமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.