ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வறிய மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்குவதாக வெளியான தகவல் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியுடன் இணைந்து பத்தாயிரம் ரூபா பணத்தை ஜனாதிபதி வழங்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்களை பிழையாக வழிநடத்தவும் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கவும் இவ்வாறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கொடுப்பனவு தொடர்பிலான மேலதிக விபரங்கள் உள்ளடங்கிய இணைய இணைப்பு பற்றிய விபரங்களும் பதிவிடப்பட்டிருந்தது, எனினும் இந்த இணைப்புக்களில் இந்த கொடுப்பனவு தொகை பற்றிய விபரங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.