பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே துணை இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கான் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் இன்று (09.05.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.