தூய்மைப்பணியாளர்கள் பாதுகாப்பு அங்கிகளை அணியா விட்டால் கொடுப்பனவு கட்!

யாழ். மாநகர சபை திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும் என்றும், அதை அணிய தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவை வழங்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகர சபை அமர்வின் போதே இந்த விடயம் சபை உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

யு.எஸ்.எய்ட் அமைப்பின் நிதியுதவியில் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களுக்கும் தூய்மைப்பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அணிகலங்கள் வழங்கி வைக்கப்பட்டது.எனினும், பெரும்பாலான திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணியாது பணிகளில் ஈடுபடுகின்றமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகிறது.

இது சுகாதாரத்திற்கு தீங்கானது என்பதால், இனிமேல் குறித்த ஆடையை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் அதை அணிய தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவை வழங்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.