வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா (photos)


வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று (08.10.2022) நடைபெற்றுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. 

இந்த நிலையில் இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் தேங்காய்களை உடைத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.

இதேவேளை நாளை மறுதினம் (10.10.2022) கேணித்தீர்த்தம் நடைபெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன், பெருந்திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆலய திருவிழாவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஆலயச் சூழலில் பருத்தித்துறைப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.