கோட்டாபயவுக்கு எந்த சலுகைகளும் கிடையாது - முன்னாள் பிரதம நீதியரசர் அதிரடி கருத்து!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எந்த சலுகைகளும் வழங்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதி அல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய ஜனாதிபதி என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை என சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கும் கோட்டாபயவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இது தொடர்பில் கோட்டாபயவுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆகவே இவ்வாறு சேவையில் இருந்து விலகிய ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.