ஏப்ரல் முதல் ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் : வெளியானது வர்த்தமானி



ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் ரூபாவாகவும் தேசிய நாளாந்த ஊதியம் 1800 ரூபாவா கவும் வரையறுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊதியத்தொகையானது ஏப்ரல் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் அமுலாகுமெனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்க தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் பிரிவு 3இன் திருத் தந்தைத் தொடர்ந்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியில், திருத்தப்பட்ட சட் டப்பிரிவுக்கு அமைவாக, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2025 டிசம்பர் 31ஆம் திகதி வரையில் குறைந்த பட்ச தேசிய மாதாந்த ஊதியத்தை 9,500 ரூபா வாலும் குறைந்தபட்ச தேசிய நாளாந்த ஊதி யத்தை 380ரூபாவாலும் மேலும் அதிகரிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தமானியில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் குறைந்த பட்ச தேசிய மாதாந்த ஊதியத்தை 3,000 ரூபாவாலும் குறைந்த பட்ச தேசிய தினசரி ஊதியத்தை 120 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 2026ஆம் ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் தொழில் அல்லது சேவையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச தேசிய மாத ஊதியம் 30,000ஆகவும், குறைந்தபட்ச தேசிய தினசரி ஊதியம் ரூ.1,200 ரூபாவாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது