கொழும்பில் பரபரப்பு! மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு.. வெளியான சிசிடிவி காணொளி

மாளிகாவத்தையின் ஜும்மா மஸ்ஜித் சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(03.09.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் T-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.