ஈஸ்டர் தாக்குதல்-சஹ்ரானின் மனைவியிடம் CID வாக்குமூலம் பதிவு!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 6 மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் மனைவி தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.