சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய முடிவு!

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்ற சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சு பதவிகளை பெற்றவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கி அண்மையில் அதன் யாப்பு திருத்தப்பட்டது.

இதற்கமைய கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் தொடர்பாக அரசியல் குழுவுக்கு எதிர்வரும் நாட்களில் அனுமதிக்கப்படவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண அண்மையில் இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார்.அவருக்கு மேலதிகமாக சுதந்திரக் கட்சியின் உப செயலாளர் ஜகத் புஸ்பகுமார மற்றும் சாமர சம்பத் தஸநாயக்க ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.