திடீரென பாராளுமன்றுக்குள் வந்த ஜனாதிபதி : வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள், கிண்டலடித்த சாணக்கியன்


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சபையில், எதிர்க்கட்சி சார்பில் 5 தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே இருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி சபைக்கு வந்த நிலையில், இன்று நாங்கள் மாத்திரமே உள்ளோம் என சாணக்கியன் தெரிவித்தார்.

அத்துடன், நாங்களும் வெளிநடப்பு செய்திருந்தால் உங்களுக்கு விவாதத்தை நடத்த முடியாது போயிருக்கும் என அவர் கிண்டலாகக் கூறினார்.

 செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும் நியாயமானதுமான விசாரணை நடைபெற வேண்டும்

“தேர்தலுக்கு முன்னர் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிய தேசிய மக்கள் சக்தி, இன்று மட்டக்களப்பில் சபை ஒன்றை கைப்பற்றுவதற்காக பிள்ளையான் குழுவினருடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொலையில் சம்பந்தப்பட்டது பிள்ளையான் குழுவினர் என அனைவரும் அறிந்ததே. இவ்வாறிருக்க, எவ்வாறு அதே தரப்பினருடன் அரசாங்கம் கூட்டணி அமைத்துள்ளது” என வினவியுள்ளார்.