இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து கலந்துரையாடியதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.