பிரித்தானியாவில் சாதித்த இலங்கைப் பெண்

இலங்கைப் பெண் ஒருவர் பிரித்தானியாவில் உயரிய மதிப்பெண்களைப் பெற்று சாதித்துக்காட்டியுள்ளார்.

Gloucestershire இல் உள்ள Stroud High School என்ற பாடசாலையில் படிக்கும் உடர்னா ஜெயவர்தன (Udarna Jayawardena) என்ற மாணவியே சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த மாணவி, கடந்த செப்டம்பரில் தான் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள், அவர் GCSE தேர்வுகளில் ஒன்பது (grade 9) என்னும் உயரிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

இப்போது அவர் தேர்ந்தெடுத்த பாடங்களை அவர் இதற்குமுன் படித்ததே இல்லை எனவும், முதன்முறையாக படித்த பாடங்களிலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த பெண்ணின் திறமைக்கு Gloucestershire பாடசாலை புகழாரம் சூட்டியுள்ளது.