கடும் இனவாதத்தை கக்கிய பௌத்த பிக்கு


மட்டக்களப்பு மயிலத்தைமடு மாதவனை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை, சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த பிரதேசத்திற்கு சென்ற பல்சமய தலைவர்களையும் ஊடகவியாளர்களையும் பெரும்பான்மையினத்தை சேர்ந்த பிக்கு உள்ளிட்ட குழுவினர் சிறைப்பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பல்சமய தலைவர்கள் சிறைபிடிப்பிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விடயங்களை வெளியிட்டு இருந்தனர்.

குறித்த பிக்கு உங்களை வாகனத்தில் வைத்து கொழுத்திவிடுவேன் எனவும், வாகனத்தினுடைய சாவியை பறித்தெடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பல்சமய தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, இஸ்லாமிய மத தலைவரை பார்த்து உனக்கு வெட்கம் இல்லையா இந்து கிறிஸ்தவ சமுகத்தோடு சேர்ந்து திரிவது வெக்கம் இல்லையா எனவும் குறித்த தேரர் இனவாதத்தை கக்கியுள்ளார்.