இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதங்களில் இடம்பெற்ற 902 விபத்து சம்பவங்களில் 965 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1842 பேர்படுகாயமடைந்துள்ளதாகவும் சாரதிகளின் கவனயீனம் காரணமாகவே அதிக விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்,பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்கு பிரதான காரணங்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல்மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் இடம்பெற்ற 902 வீதி விபத்துகளில் 965 பேர்உயிரிழந்துள்ளதாகவும் 1842 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நுவரெலியா கம்பளைபிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கதிர்காமம் பகுதியிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் காயமடைந்திருந்தனர்.
கடந்த புதன்கிழமை கொத்மலை இறம்பொடை பகுதியில் வேன் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இராஜாங்கனை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிசுற்றுலா சென்றிருந்த தரப்பினரே இந்தவிபத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி அலதெனிய, குளுகம்மன பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 37 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் பேராதனை, கண்டி மற்றும் தித்தபஜ்ஜல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த இலங்கை பொலிஸ் திட்டமிட்டுள்ளதுடன் மேலும் அதன் கீழ்சாரதிகளுக்கு விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன