80 இலட்ச ரூபா அரச பணம் மோசடி : கெஹலியவின் மகனும் அதிரடியாக கைது


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில், ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்தால் சந்தேக நபராக நேற்று செவ்வாய்க்கிழமை (20)  பெயரிடப்பட்டிருந்தார்.

இதனையடுத்து,   இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், வாக்குமூலம் அளிக்க, இன்று புதன்கிழமை (21) காலை வந்திருந்தார்.

சுமார் நான்கு மணிநேர விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் 3 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி புதன்கிழமை  உத்தரவிட்டுள்ளார்.