கேரளாவில் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் அடுத்தடுத்து 6 குண்டுகள் வெடிப்பு - 35 இற்கும் மேற்பட்டோர் காயம்

கேரளா - எர்ணா குளம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதோடு 35 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று(29) காலை 9 மணியளவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இந்தச்சம்பவம் பதிவாகியுள்ளது.

கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நாளான இன்று கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கடமாச்சேரியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கம் ஒன்றில் ஜெப கூட்டம் நடைபெற்றுள்ளது.

கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு பங்கேற்றிருந்த இக் கூட்டத்தில் 2000 ற்கும் மேற்பட்டவர்கள் இருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 6 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கேரள பகுதி பெரும் பரபரப்படைந்து காணப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.