கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்யபொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸாரல் நடத்தப்பட்ட சேõதனையில், ரி56 ரக துப்பாக்கியுடன் முச்சக்கர வண்டியில் சென்றபோது சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவிலின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத்தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொருசந்தேக நபரைக் கைது செய்தனர்.
குறித்த சந்தேக நபரை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கைக்குண்டுகளை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரும் அதே நடவடிக்கைகளில் ஈடுபட்ட மேலும் இரண்டுசந்தேக நபர்களும் இருப்பதும் தெரியவந்தது.
அதன்படி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்யவவுனியா பகுதிக்குச் சென்றிருந்த போது, அதற்குள் சந்தேக நபர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா காந்தி நகர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஜீவராசா சுஜீபன்
செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளங்கோ இசைவிதன்
வட்டுக்கோட்டை அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மகேந்திரன் யோகராசா
ஆகியோர் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் 0718591966, 0718596150 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார்,பொதுமக்களைக் கோரியுள்ளனர்.