நுவரெலியா இறம்பொடையில் பஸ் விபத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக பொதுமகன் ஒருவர் கரும காரியம் செய்த சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் இதுவரையில் 23 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இறம்பொடை பிரதேசத்தில் இயற்கை அனர்த்தங்கள், ஏனைய விபத்தில் இறந்த அனைத்து உயிர்களுக்குமான கரும காரியங்களை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு அகால மரணமடைந்த அனைத்து உயிர்களின் ஆத்ம சாந்திக்காக நேற்று திங்கட்கிழமை விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆற்றங்கரையில் நபர் ஒருவர் திதி கரும காரியங்களை செய்திருந்தமை பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்த மனிதாபிமான செயலை, யாழ்ப்பாணம் சாய் குலத்தை பிறப்பிடமாகவும் கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொத்தமலை பனம்கம்மான கரகஸ்தலாவில் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சாய்குல அறக்கட்டளைகள் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான தேவேந்திர குமாரசாமி திருக்குமரன் சொந்த செலவில் இந்த உன்னதமான செயல் இடம்பெற்றது.
இவர் போன்ற நல்லுள்ளங்கள் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும் என அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.