'காஸாவை முழுமையாக கைப்பற்றுவோம்.." : நெதன்யாகு கருத்தால் பரபரப்பு, தீவிர கண்காணிப்பில் ஈரான்


காஸா  முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு முதல் பலஸ்தீனம்  மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில், காஸாவில் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தநிலையில், நேற்று (19) திடீரென பாலஸ்த்தீனத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை இஸ்ரேல் அனுமதித்தது.

இருப்பினும், காஸா பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹமாஸ{டன் சண்டை தீவிரமாக இருக்கிறது, நாங்கள் முன்னேறி வருகிறோம்.

விரைவில் காஸா முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம், இதில் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

எங்கள் வெற்றியை தடுக்க முடியாத வகையில் நாங்கள் செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்த காணொளி வெளியாகி பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறான பின்னணியில் இந்த பிரச்சனையை ஈரான் உற்று நோக்கி வருகிறது. ஹமாஸ{க்கு ஆதரவாக ஈரானின் ஹவுதி குழுக்கள் தாக்குதலை மேற்கொண்டு வந்தன.

இப்போது ஹமாஸை இஸ்ரேல் நெருக்குவதால், இதில் ஈரான் தலையிடவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.