'300 கொள்கலன்களிலும் தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட புலிகளின் ஆயுதங்களே.." : வெடித்தது புதிய சர்ச்சை

 
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சர்ச்சைசக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை என்றும், அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களேஇருந்துள்ளன என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றிய அவர்,


தேர்தல் காலத்தில் பிரபாகரனின் சிலையைஅமைப்பதாகவும், பிரபாகரன் கடவுள் என்றும் என்பிபியினரால் பாடலும் உருவாக்கப்பட்டது. அந்த பாட்டு என்னிடம் உள்ளது.வேண்டுமென்றால் அதனை சபையிலும்சமர்பிக்கலாம். மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு கூறினர். அத்துடன் பிரபாகரனின் அம்மாவின் பெயரில்ஜெட்டி ஒன்றை அமைப்பதாகவும் அந்த
பாடலில் கூறினர். அந்தளவுக்கு பொய்களைகூறினர்.

இதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் 300 கொள்கலன்கள் தொடர்பான கதைகள்
கூறப்பட்டன. இப்போது இது தொடர்பில்கூறுவதால் எனக்கு சூடுகள் படலாம். ஆனா
லும் இதனை கூறியாக வேண்டும்.அதாவது தேர்தலுக்கு முன்னர் ஜனாதி
பதி ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அங்கேபுலம்பெயர்ந்தோரை சந்தித்தார். அங்கே
இந்த நாட்டில் செய்ய முடியாதவற்றைசெய்ய முடியுமென்று வாக்குறுதிகளையும்
வழங்கினர்.

அத்துடன் தாய்லாந்தில் இருந்த கொள்கலனில் இருந்த பொருட்கள் பிரபாகரனுடையது. 2009க்கு முன்னர் பிரபாகரன்கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் எஞ்சியிருந்து அதனை
குமரன் பத்மநாதன் ஊடாக இப்போதுஇவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே
கொண்டுவந்துள்ளனர் என்று மக்கள் கதைக்கின்றனர். எனக்கும் ஜெர்மனியில் உள்ள
புலம்பெயர்ந்த மக்கள் கதைத்தனர். அங்கேஎஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில்
போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்த
முடியாது. ஆனால் இதனை பொறுப்புடன்கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில்
கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின்ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து
ஒவ்வொரு இடத்திற்கு சென்று இறுதியில்இங்கே கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை இவற்றை கூறுவதால் எனக்குஅச்சுறுத்தல் ஏற்படலாம். என்னை எம்.பி
பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர்.

ஜுன் 26ஆம் திகதி வழக்கு உள்ளது. என்னைஉள்ளே போடலாம். ஆனால் நான் எப்போதாவது வெளியில் வருவேன். ஆனால்நான் அஞ்சவில்லை. ஜனாதிபதி மீண்டும்
ஜேர்மனிக்கு போகின்றார். புலிகளின் டயஸ்போராவின் ஜேர்மனியில் உள்ள தலைவர்
ஒருவர் என்னிடம் கூறியுள்ளார். ஜனாதிபதிவந்தபோது பணம் கொடுத்ததாக கூறினார்.
நான் புலம்பெயர்நதோரிடம் இருந்து பெற்றபணம் தொடர்பான தகவல்களை வெளிப்ப
டுத்தியுள்ளேன். ஆனால் உங்களால் அதனைகூற முடியுமா? என்றார்